Saturday, 23 September 2017
பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர்கசாயம் வழங்குதல் துவக்க விழா மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு விளக்க முகாம்
தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்புகுடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
(பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்குநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கினார்.)
(பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்குநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கினார்.)
Tuesday, 19 September 2017
EMIS WEBSITE NOW OPEN (update News)
EMIS WEBSITE NOW OPEN (update News)
EMIS WEBSITE NOW OPEN*
தற்போது நீங்கள் செய்ய வேண்டியது
1. SSA அலுவலகத்திலிருந்து புதிய password பெற வேண்டும்.
Monday, 18 September 2017
பள்ளிகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம் நவம்பரில் வெளியீடு
தமிழக பள்ளிகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்கக்கூடாது என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்கக்கூடாது என தெரிவித்து இருந்தார்.
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர்/அக்டோபர் 2017 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் அரசுத் தேர்வுகள் இயக்குநர் செய்திக்குறிப்பு
நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 16.09.2017(சனிக்கிழமை) அன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இது குறித்து முழு விபரம் காண இதனை அழுத்துக...
மேலும் இது குறித்து முழு விபரம் காண இதனை அழுத்துக...
Sunday, 17 September 2017
ஜாக்டோ-ஜியோ போராட்டம்: காத்திருப்போர் பட்டியலில் 5 வட்டாட்சியர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5 வட்டாட்சியர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 - ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நீதிமன்ற உத்தரவையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் போராட்டத்தை தாற்காலிகமாக விலக்கிக்கொண்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 - ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நீதிமன்ற உத்தரவையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் போராட்டத்தை தாற்காலிகமாக விலக்கிக்கொண்டனர்.
திருமறைக்காடு ஒப்புவித்த மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருமறைக்காடு,திருப்பிரமபுரம்,திருவிருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
(பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருமறைக்காடு,திருப்பிரமபுரம்,திருவிருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.)
(பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருமறைக்காடு,திருப்பிரமபுரம்,திருவிருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.)
வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கனமழை காரணமாக வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு மட்டும் நாளை 18-09-2017 விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
டிஎன்பிஎஸ்சி தகவல்:குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது.
Saturday, 16 September 2017
டிஎன்பிஎஸ்சி தகவல்:குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி:
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை
1. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2. அனைத்து அசல் சான்றிதழ்கள்.
3. அனைத்து அசல் சான்றிதழ்களின் இரு நகல்கள்.
4. உங்களின் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்.
5. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ள நீங்கள் ஏற்கனவே கொண்டு சென்ற ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த கடிதம்.
1. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2. அனைத்து அசல் சான்றிதழ்கள்.
3. அனைத்து அசல் சான்றிதழ்களின் இரு நகல்கள்.
4. உங்களின் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்.
5. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ள நீங்கள் ஏற்கனவே கொண்டு சென்ற ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த கடிதம்.
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை
அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.
புத்துயிர் அளித்த பெற்றோர் - ஆசிரியர் கழகம்: மிடுக்குடன் நடைபோடும் அதிகரட்டி ஊ.ஒ. தொடக்கப் பள்ளி; ஆசிரியருக்கு ஊதியம் வழங்கும் ஆசிரியர்கள்
நீலகிரி மாவட்டத்தில் 1832-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 4 பள்ளிகளில் அதிகரட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் ஒன்றாகும். முன்னோடி பள்ளியான இதில், காலப்போக்கில் மாணவர் சேர்க்கை குறைந்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
தங்களுக்கு கல்வி அளித்த பள்ளி தங்கள் கண் முன்னே மூடப்படுவதை தடுக்க இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் களமிறங்கியதன் பயனாக, தற்போது இப் பள்ளியில் 140 மாணவர்கள் படிக்கின்றனர்.
தங்களுக்கு கல்வி அளித்த பள்ளி தங்கள் கண் முன்னே மூடப்படுவதை தடுக்க இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் களமிறங்கியதன் பயனாக, தற்போது இப் பள்ளியில் 140 மாணவர்கள் படிக்கின்றனர்.
சாரண, சாரணிய இயக்க தலைவர் தேர்தலில் எச்.ராஜா தோல்வி: ப.மணி வெற்றி பெற்றார்
சாரண-சாரணியர் இயக்க தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் வாக்குப்பதிவு நடந்தது.
தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. மொத்தம் 499 வாக்குகள் உள்ளன. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.
தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. மொத்தம் 499 வாக்குகள் உள்ளன. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.
JACTTO - GEO உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 5-வது நாளாக நேற்று போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தெரிவித்தபடி போராட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக் கோரி பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்த சமுத்திரகனி மகன் காளிமுத்து (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வன்னியன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் காளிமுத்துவும் கலந்து கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் இல்லையென்றால் ஆசிரியர்கள் எப்படி காலம் தள்ள முடியும் என பேசினாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய காளிமுத்து வெளியில் சென்று விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறி விட்டு சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றவுடன் விஷத்தை குடித்து அங்கு மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை காளிமுத்து இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்ட ஆசிரியர் தற்கொலை செய்தது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.
ஆசிரியர் தற்கொலை விவகாரம் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக காளிமுத்து மதுவுடன் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிவகிரி போலீசார் தெரிவித்தனர்.
பிளஸ் 2 அக்டோபர் தேர்வு "ஹால் டிக்கெட்" அக்டோ-18ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் தரவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 அக்டோபர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், 18ம் தேதி முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ்2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், 18ம் தேதி பிற்பகல், 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த விபரங்களை, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்' என, குறிப்பிட்டுள்ளார்.
'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ்2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், 18ம் தேதி பிற்பகல், 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த விபரங்களை, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்' என, குறிப்பிட்டுள்ளார்.
DEE - Term 1 Exam Time Table
*முதலாம் பருவத்தேர்வு அட்டவணை*
18.09.2017தமிழ்
19.09.2017ஆங்கிலம்
20.09.2017கணிதம்
21.09.2017அறிவியல்
22.09.2017சமூகஅறிவியல் & சூழ்நிலையியல்
1,3,5,7வகுப்புகள் *காலை*
2,4,6,8வகுப்புகள் *மதியத்தேர்வு*
23.09.2017 வேலைநாள்
18.09.2017தமிழ்
19.09.2017ஆங்கிலம்
20.09.2017கணிதம்
21.09.2017அறிவியல்
22.09.2017சமூகஅறிவியல் & சூழ்நிலையியல்
1,3,5,7வகுப்புகள் *காலை*
2,4,6,8வகுப்புகள் *மதியத்தேர்வு*
23.09.2017 வேலைநாள்
ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here