Tuesday, 12 December 2017

கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக, 113 தேர்வு மையங்கள்

கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக, 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன. முழு பாடத்திட்டத்தில் இருந்தும், வினாக்கள் இடம்பெறுவதால், மாணவர்களின் கல்வித்தரம் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு, பொதுத்தேர்வும் நெருங்கவுள்ளதால், மாவட்ட வாரியாக, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, தேர்வு மையங்கள் அதிகரிக்குமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில், 349 அரசு, அரசு உதவிபெறும், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், 35 ஆயிரத்து 836 பேர், பொதுத்தேர்வை முதன்முறையாக சந்திக்கின்றனர். இதேபோல், பிளஸ் 2 வகுப்பில், 36 ஆயிரத்து 833 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.

இவர்களுக்காக, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்தாண்டுகளில் ஏற்கனவே இருந்த, 23 மையங்களோடு சேர்த்து புதிதாக, 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், கோவையில் புதிய, 14 மையங்களையும் சேர்த்து, 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதை பொறுத்து, பிரத்யேகமாக தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. பத்தாம் வகுப்புக்கு, புதிய மையங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 -தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here