மதுரை மாவட்டத்திலுள்ள அரசு இ சேவை மையங்களில் பிரின்டருக்கான ரிப்பன், பிளாஸ்டிக் கார்டுகள் இல்லாததால் வாக்காளர், ஆதார் கார்டு நகல்கள் பெற முடியாமல் பொது மக்கள் தவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உட்பட பத்து தாலுகா அலுவலகங்கள், பாஸ்போர்ட் சேவை மையம் போன்ற இடங்களில் அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில் இ சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு அனைத்து வகை வருவாய்த்துறை சான்றிதழ்கள், நில ஆவணங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டன. இதற்காக 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. வாக்காளர் அட்டை, ஆதார் கார்டுகளில் மாற்றங்கள் செய்த பிறகு இங்கு 30 ரூபாய் செலுத்தி திருத்தப்பட்ட கார்டுகளை பெறலாம்.
கடந்த 15 நாட்களாக அனைத்து மையங்களிலும் வாக்காளர், ஆதார் கார்டு நகல் பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். கார்டுகள் அச்சடிப்பதற்கு தேவையான ரிப்பன், பிளாஸ்டிக் கார்டு சென்னையிலிருந்து வராததால் அச்சிட்டு கொடுக்க முடியவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் கார்டு நகல் பெற வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சர்வர் அடிக்கடி பழுதாகி விடுவதால் வருவாய் சான்றிதழ்கள் வழங்குவதும் தாமதமாகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். இதனால் அதற்கான ரிப்பன், கார்டு தீர்ந்து விடுகிறது. பக்கத்து மாவட்டங்களிலிருந்து வரவழைத்து கார்டு அச்சடித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அங்கும் அவை கிடைக்கவில்லை. இதுகுறித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம். அடுத்த வாரம் ரிப்பன், பிளாஸ்டிக் கார்டு வந்ததும் விண்ணப்பித்த அனைவருக்குமே அச்சிட்டு வழங்கப்படும். சர்வர் பழுது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது சான்றிதழ் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை, என்றார்.
- தினமலர்
இம்மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உட்பட பத்து தாலுகா அலுவலகங்கள், பாஸ்போர்ட் சேவை மையம் போன்ற இடங்களில் அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில் இ சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு அனைத்து வகை வருவாய்த்துறை சான்றிதழ்கள், நில ஆவணங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டன. இதற்காக 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. வாக்காளர் அட்டை, ஆதார் கார்டுகளில் மாற்றங்கள் செய்த பிறகு இங்கு 30 ரூபாய் செலுத்தி திருத்தப்பட்ட கார்டுகளை பெறலாம்.
கடந்த 15 நாட்களாக அனைத்து மையங்களிலும் வாக்காளர், ஆதார் கார்டு நகல் பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். கார்டுகள் அச்சடிப்பதற்கு தேவையான ரிப்பன், பிளாஸ்டிக் கார்டு சென்னையிலிருந்து வராததால் அச்சிட்டு கொடுக்க முடியவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் கார்டு நகல் பெற வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சர்வர் அடிக்கடி பழுதாகி விடுவதால் வருவாய் சான்றிதழ்கள் வழங்குவதும் தாமதமாகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். இதனால் அதற்கான ரிப்பன், கார்டு தீர்ந்து விடுகிறது. பக்கத்து மாவட்டங்களிலிருந்து வரவழைத்து கார்டு அச்சடித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அங்கும் அவை கிடைக்கவில்லை. இதுகுறித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம். அடுத்த வாரம் ரிப்பன், பிளாஸ்டிக் கார்டு வந்ததும் விண்ணப்பித்த அனைவருக்குமே அச்சிட்டு வழங்கப்படும். சர்வர் பழுது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது சான்றிதழ் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை, என்றார்.
- தினமலர்
No comments:
Post a Comment