Sunday, 24 December 2017

கரூர்:10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க சேவை மையம்

10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு மார்ச் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் ஆன்லைனில விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக நேற்றுமுதல் வரும் 29ம்தேதி வரை (ஞாயிறு தவிர்த்து) ஆன் லைனில் விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தில் அரசுத்தேர்வு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர் நகராட்சி ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, கரூர் பசுபதீசுவரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு தேர்வு சேவை மையங்களை தனித்தேர்வர்கள் அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கரூர் மாவட்ட கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here