Sunday, 24 December 2017

ஆசிரியரை தாக்கிய விவசாயி கைது

பண்ருட்டி அருகே தோப்புகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் செந்தில்நாதன் (37). புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை பல ஆண்டுகளாக திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இத்தகவலை கிருஷ்ணமூர்த்தி தனது நண்பரிடம் தெரிவித்து செந்தில்நாதனிடம் பணத்தை வாங்கி தருமாறு கூறி உள்ளார்.


அவர், செந்தில்நாதனிடம் சென்று வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு கூறினார். இதனால் அவமானமடைந்த செந்தில்நாதன் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று, நான் உன்னிடம் பெற்ற கடனை வாங்கி தரச்சொல்லி ஏன் உனது நண்பரிடம் கூறினாய் என கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள் வசந்தபிரியா ஆகிய 2 பேரும் செந்தில்நாதனை உலக்கை மற்றும் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற செந்தில்நாதனின் மனைவி விமலாவை கிருஷ்ணமூர்த்தி மனைவி பத்மாவதி முந்திரி கட்டையால் தாக்கினார். படுகாயம் அடைந்த 2 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து செந்தில்நாதன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரது மனைவி, மகளை தேடிவருகின்றனர்.

-தினகரன் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here