பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிசம்பர் 11 ம் தேதி முதல் 16 வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அபராத கட்டணத்துடன் வரும் 18ம் தேதி முதல் 20 வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம்.
2016 ஜூன், ஜூலை பருவம் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் எஸ்.எஸ்.எல்.சி முழுமையாக தேர்ச்சி பெற்று 2 ஆண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வை நேரடி தனித்தேர்வர்களாக எழுத முடியும். இதுவே, அவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக தனித்தேர்வர்கள் கூடுதல் தகவல் பெற அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிசம்பர் 11 ம் தேதி முதல் 16 வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அபராத கட்டணத்துடன் வரும் 18ம் தேதி முதல் 20 வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம்.
2016 ஜூன், ஜூலை பருவம் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் எஸ்.எஸ்.எல்.சி முழுமையாக தேர்ச்சி பெற்று 2 ஆண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வை நேரடி தனித்தேர்வர்களாக எழுத முடியும். இதுவே, அவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக தனித்தேர்வர்கள் கூடுதல் தகவல் பெற அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment