கடலுார் மாவட்டத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக ஆர்.ஏ.ஏ., திட்டத்தில் 27 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக பள்ளி படிப்பை முடிக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் உயர்கல்விக்குச் செல்வதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு கடந்தாண்டு ராஷ்டிரிய அவியாஸ் அபியான் (ஆர்.ஏ.ஏ) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அருகில் உள்ள கல்லுாரிகளுடன் இணைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் அருகில் உள்ள கலை, அறிவியல், பொறியியல் கல்லுாரிகளுக்குச் சென்று பாடம் கற்பிக்கும் முறை, கல்வி சார்ந்த உபகரணங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் 9 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன் பெறலாம்.
கடலுார் மாவட்டத்தில் கடந்தாண்டு 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்தாண்டு கோட்டேரி அரசு உயர்நிலைப் பள்ளி, கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, மேலிருப்பு அரசு உயர் நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளி, திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலுார் வேணுகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட 27 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், '9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் அருகில் உள்ள கல்லுாரிகளுக்கு சென்று கணிதம், அறிவியல் ஆய்வகத்தையும், கல்வி உபகரணத்தையும் பார்வையிட்டு விரிவுரையாளர்களிடம் சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக கடந்த ஆகஸ்டில் கல்லுாரி விரிவுரையாளர்களை அழைத்து கணிதம், அறிவியல் பாடம் சார்ந்த விளக்கம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இம்மாத இறுதிக்குள் பரங்கிப்பேட்டையில் உள்ள கடல்சார் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தில் மரைன் பயாலஜி பாடம் குறித்தும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விவசாய பாடம் பற்றியும் தெரிந்து கொள்ள உள்ளனர்' என்றார்.
அதன் ஒரு பகுதியாக பள்ளி படிப்பை முடிக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் உயர்கல்விக்குச் செல்வதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு கடந்தாண்டு ராஷ்டிரிய அவியாஸ் அபியான் (ஆர்.ஏ.ஏ) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அருகில் உள்ள கல்லுாரிகளுடன் இணைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் அருகில் உள்ள கலை, அறிவியல், பொறியியல் கல்லுாரிகளுக்குச் சென்று பாடம் கற்பிக்கும் முறை, கல்வி சார்ந்த உபகரணங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் 9 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன் பெறலாம்.
கடலுார் மாவட்டத்தில் கடந்தாண்டு 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்தாண்டு கோட்டேரி அரசு உயர்நிலைப் பள்ளி, கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, மேலிருப்பு அரசு உயர் நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளி, திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலுார் வேணுகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட 27 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், '9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் அருகில் உள்ள கல்லுாரிகளுக்கு சென்று கணிதம், அறிவியல் ஆய்வகத்தையும், கல்வி உபகரணத்தையும் பார்வையிட்டு விரிவுரையாளர்களிடம் சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக கடந்த ஆகஸ்டில் கல்லுாரி விரிவுரையாளர்களை அழைத்து கணிதம், அறிவியல் பாடம் சார்ந்த விளக்கம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இம்மாத இறுதிக்குள் பரங்கிப்பேட்டையில் உள்ள கடல்சார் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தில் மரைன் பயாலஜி பாடம் குறித்தும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விவசாய பாடம் பற்றியும் தெரிந்து கொள்ள உள்ளனர்' என்றார்.
No comments:
Post a Comment