Tuesday, 12 December 2017

உயர்கல்வி ஆலோசனைக்கு வழிகாட்டி ஆசிரியர்கள்:பள்ளிகளில் நியமிக்க திட்டம்

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஆர்வமுள்ள ஆசிரியர்கள் கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் நலனுக்காக, உயர்கல்விக்கான ஆலோசனைகள் வழங்க, வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். வட்டார வாரியாக உள்ள, பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, கல்வியாளர்கள் கொண்டு, ஆண்டுதோறும் கருத்தரங்கு நடத்தப்படும்.


கடந்தாண்டில், பாடவாரியாக உயர்கல்வி படிப்புகள், அரசு கல்வி நிறுவனங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட, தகவல்கள் அடங்கிய புத்தகம் அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இது, மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, பெற்றோர் தெரிவித்தனர். நடப்பாண்டில், உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கை, பள்ளிகளிலே நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு, உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆர்முள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, உயர்கல்வி ஆலோசனை வழங்கும் விதம் குறித்து, பயிற்சி அளிக்கப்படும். கலை அறிவியல், தொழிற்கல்வி, இன்ஜி., மருத்துவ படிப்புகள், மாவட்ட வாரியாக உள்ள, மத்திய, மாநில அரசு கல்வி நிறுவனங்களின் பெயர், முகவரி குறித்து விளக்கப்படும்.

இதோடு, புதிய வகை படிப்புகள், விண்ணப்பிக்கும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்படும்.இவர்கள், அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு, விளக்கம் அளிப்பர். இதுசார்ந்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி, அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் துவங்கும்' என்றார்.
- தினமலர்


No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here