Saturday, 16 December 2017

டெங்கு கொசு: 55 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 55 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கல்வித்துறை சார்பில் டெங்கு பரவாமல் தடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்த மாணவர் விவரங்கள் உடனுக்குடன் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும் மாவட்டத்தில் 1991 பள்ளிகளில் ஆய்வு செய்ய, 107 குழுக்கள் நியமிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர்கள் உள்பட மூவர் குழுவில் இடம்பெற்றனர். இவர்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் என அனைத்து வகை பள்ளிகளில் டெங்கு ஆய்வு செய்தனர். டெங்கு கொசு உற்பத்தி காரணிகளான டயர், பானை உள்ளிட்ட பயன்படுத்தப்படாத பழைய கழிவுகள், மொட்டை மாடிகள், பூந்தொட்டிகளில் நீர் சேமிக்கப்பட்டுள்ளதா, பள்ளி வளாகங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா, சுற்றுசுவரிலிருந்து 500மீ தொலைவுக்குள் குப்பை கூளங்கள், பழைய கழிவு பொருட்கள் உள்ளதா என 15 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தபணிகள் கடந்த மாதம் நிறைவடைந்து, ஆய்வுக்குழுவினர் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான பள்ளிகள் குறித்து, அறிக்கை தயாரித்து சிஇஓ து.கணேஷ்மூர்த்தியிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து, கணேஷ்மூர்த்தி சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு பள்ளியின் பெயர் பட்டியலை பரிந்துரைத்தார். அதன்படி மாவட்டத்தில் அரசு, தனியார், அரசு உதவிபெறும் என 55 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்களில் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர 32 பள்ளிகளுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், பள்ளிகளில் ஆய்வுபணி தொடரும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here