கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்திற்கு அறிவியல் உபகரணங்களை லண்டன் வாழ் தமிழர்கள் நேற்றுமுன்தினம் வழங்கினர். கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் சார்பாக அறிவியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், லண்டன் வாழ் தமிழர் டாக்டர் கனகலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, லண்டனில் உள்ள அறிவொளி வளையம் தமிழர்கள் சார்பாக, அறிவியல் ஆய்வகத்திற்கு தேவையான டேபிள், ஸ்டீல் அலமாரி மற்றும் அறிவியல் ஆய்வு உபகரணங்களை வழங்கினார். மேலும், உலகம் முழுவதும் தமிழர்கள் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்குகின்றனர். அதுபோல், நீங்களும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். முடிவில் அறிவியல் ஆசிரியர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், லண்டன் வாழ் தமிழர் டாக்டர் கனகலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, லண்டனில் உள்ள அறிவொளி வளையம் தமிழர்கள் சார்பாக, அறிவியல் ஆய்வகத்திற்கு தேவையான டேபிள், ஸ்டீல் அலமாரி மற்றும் அறிவியல் ஆய்வு உபகரணங்களை வழங்கினார். மேலும், உலகம் முழுவதும் தமிழர்கள் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்குகின்றனர். அதுபோல், நீங்களும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். முடிவில் அறிவியல் ஆசிரியர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment