Tuesday, 26 December 2017

அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அறிவியல் திருவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அறிவியல் திருவிழா நடத்தப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பணியாற்றி வரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து மாநில அளவிலான இளைஞர்கள் அறிவியல் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுசல்யா தலைமை வகித்தார்.   மாநில செயலாளர் தியாகராஜன் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். இதில் மாநில பொது செயலாளர் அமலராஜன் கலந்து கொண்டு, அறிவியல் இயக்க கொள்கை குறிப்பு கையேட்டை வெளியிட்டு பேசுகையில், இளைஞர்கள் சாதி, மதம், இனம், மொழி கடந்து சமூக பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான சமூகம் உருவாகவும், நாட்டின் வளர்ச்சியிலும் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சமூக ஒற்றுமை, சமூக வளர்ச்சி, சமூக நீதிக்காக நாம் இணைய வேண்டும். இந்தியாவில் வாழும் அனைவரும், நம் தேசத்தின் தனித்தன்மையை போற்றி பாதுகாக்க வேண்டும். இளைஞர்களின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏற்ற தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்றார்.

கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அறிவியல் திருவிழா நடத்துவது, கல்லூரிகளில் அறிவியல் இயக்க கிளை தொடங்குவது, கிராமங்களில் அறிவியல் இயக்க தொடர் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருப்பூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அறிவியல் இயக்க இளைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் வீரமுத்து வரவேற்றார். முடிவில் பாலாஜி நன்றி கூறினார்.

-தினகரன் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here