அடுத்த நான்காண்டில் கல்வித்துறையில் ஒருலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என பாரத பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தார்.
டெல்லியில் விஞ்ஞான் பவனில் கல்வி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை பிரதமர் மோடி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ``நாடு முழுவதும் கல்விக்கான உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.
உயர்கல்வியை மேம்படுத்த கூடுதல்நிதி ஒதுக்க அரசு முடிவெடுத்துள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் கல்விக்காக சுமார் ஒருலட்சம்கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். புதிய இந்தியாவுக்கான திறவுகோல் நல்ல கல்விதான். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறை தாண்டிய கல்வியை கற்றுத்தரவேண்டும். இதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டை கட்டமைக்க கல்வி அத்தியாவசியமானது. ஞானம் இன்றி வெறுமனே பட்டம் பெறுவது பயனற்றது, இந்திய கலாசாரத்தின் தூண்களாக வேதங்கள் திகழ்வதாகவும்” அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment