Saturday, 29 September 2018

சூலூர்: அடடே... சொல்ல வைக்கும் அரசு பள்ளி! தனியாருக்கு நிகராக தரம் உயர்ந்த அதிசயம்

ஆசிரியர்களும் ஊர்மக்களும் தொழிலதிபர்களும் இணைந்து, அரசு பள்ளியை தரம் உயர்த்தி அதிசயம் நிகழ்த்தியுள்ளனர். 80 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து, எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.கோவை மாவட்டம், சூலுார் தாலுகாவில் உள்ளது வடுகன்காளிபாளையம்.
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓட்டுக்கூரையில், 1909ல் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கிய இந்தப் பள்ளி.முழுக்க கிராமப்பகுதியில், அதுவும் கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்தப்பள்ளிக்கு, அரசு அதிகாரிகளின் கடைக்கண் பார்வை கிடைப்பது அரிதாகவுள்ளது. ஆனால், கடந்த 2013 முதல் இந்தப்பள்ளிக்கு வசந்த காலம் துங்கியது.ஊரின் முக்கியஸ்தர்கள், பள்ளியின் கிராமக்கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் முன்முயற்சி இப்பள்ளிக்கு கிடைத்தது.


அவர்கள், 7 லட்சம் ரூபாய் செலவில், 130 மீ., நீளம், 5 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவரை உயர்த்தினர். பள்ளியின் முன்புறம் இருந்த வீடு ஒன்றை, அரசின் தொகுப்பு வீடு கொடுத்துவிட்டு அகற்றினர்.இதனால் 25 சென்ட் பரப்பளவில் மைதானம் விரிந்தது. 2 லட்சம் ரூபாய் செலவில் வண்ணமயமான வானவில் வகுப்பறைகள் நவீனமாயின. 'ஏபிஎல்' முறையில், 6 கலர்களில் டேபிள்கள் மாறின.புல்வெளி விரிந்து, நடைபாதை நீண்டு தேசிய கொடிக்கம்பத்தின் பகுதி, 30 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டது. இலக்கியத்திறன் வளர்ப்புக்கு, 3.45 லட்சம் செலவில் திறந்தவெளி கலையரங்கம் அமைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப புரட்சியை பள்ளியில் தருவதற்கு, 4 டேப்லெட், 2 எல்இடி அரசு வழங்கிய, 4 கம்ப்யூட்டர், 5 லேப்டாப், உள்ளூர் ஜமாத் உதவியில் தடையில்லா, 'இன்டர்நெட்' என்று அறிவியல் உலகின் அறிவுச்சாளரத்தை திறந்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட, 7 ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் இணைந்து கடந்த ஆறே ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க அளவில், 'ஸ்மார்ட் பள்ளி'யாக மாற்றியிருப்பது நம்மை அசரடிக்கிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் சிங்காரவேல் கூறுகையில், ''மாணவர்கள் எண்ணிக்கை, 2013ல் 178லிருந்தது; இப்போது 257 ஆக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளை தோற்கடிக்கும் அளவில், இனிய கற்றல் சூழலை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இம்முயற்சிக்கு, முன்னாள் கிராமக் கல்விக்குழு தலைவர் முஜிபுர்ரஹ்மான், ஈஸா, அமிர்தம், கோல்டு போன்ற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அபாரமானது,'' என்றார்.இத்தனை வளர்ச்சிக்குப் பின்னும், அந்த ஊரின் முக்கியஸ்தர்கள், 'பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கையை, 7லிருந்து 10 ஆக உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கை மனுவுடன், முதன்மை கல்வி அலுவலர் அலுவலத்திற்கு சென்று வருகின்றனர். அரசும் கல்வித்துறையும் கைகொடுத்தால் நலம்.
Source: Dinamalar

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here