Thursday, 11 October 2018

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
 கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஈரோடு மண்டல தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 2015 நவம்பர் முதலான பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்குதல், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 15 சதவீத பென்சன் உயர்த்துதல், 2017 டிசம்பர் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்களை வட்டியுடன் வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டம் நடந்தது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here