Tuesday, 25 December 2018
Monday, 17 December 2018
Sunday, 16 December 2018
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கப்படும்.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத்திறனை வளர்க்கும் வகையில் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத்திறனை வளர்க்கும் வகையில் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசுப்பள்ளிகளில் 3,000 அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடம் காலி:தொடரும் 10 ஆண்டு அவல நிலைக்கு முற்றுப்புள்ளி எப்போது?
தமிழகத்தின் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகள் உள்ளன. 6 ஆயிரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உயர்நிலைப் பள்ளிகளில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 322 மாணவர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 68 லட்சத்து 12 ஆயிரத்து 953 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 95 ஆயிரத்து 29 மாணவர்களும், ஆரம்ப பள்ளிகளில் 29 லட்சத்து 10ஆயிரத்து 351 மாணவர்கள் தொடக்கப்பள்ளி, அரசு நிதி உதவிப்பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 526 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
Thursday, 13 December 2018
Tuesday, 4 December 2018
வெளியூர், வெளி மாநிலங்களில் மையம் இருப்பதால் நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதியில் 11 அரசு, 4 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 12ம் வகுப்பில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவம் படிக்க மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். கடந்தாண்டு நீட் தேர்வு எழுத சென்ற கிராமப்புற மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதன் விளைவாக தற்போது நீட் தேர்வு பற்றிய ஆர்வம் மாணவர்களிடம் மட்டுமல்ல பெற்றோர்களிடமும் குறைந்து விட்டது.
இதனால் மாணவர்கள் எப்படியும் 12ம் வகுப்பு முடித்த பின்னர் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரியில் சேர போகிறோம் இந்த படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஏன் உடலை வருத்தி படிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துள்ளதாகவும், மேலும் நீட் தேர்வு எதிர்கொள்ள நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையை போக்க அரசு பாடத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்தாலும் அது ஆசிரியர், மாணவர்களிடம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதனால் மாணவர்கள் எப்படியும் 12ம் வகுப்பு முடித்த பின்னர் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரியில் சேர போகிறோம் இந்த படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஏன் உடலை வருத்தி படிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துள்ளதாகவும், மேலும் நீட் தேர்வு எதிர்கொள்ள நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையை போக்க அரசு பாடத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்தாலும் அது ஆசிரியர், மாணவர்களிடம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.
'வாட்ஸ் ஆப்' வதந்தியை தடுக்க விளம்பர படங்களில் விழிப்புணர்வு
சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்திகளால், 25க்கும் மேற்பட்டோர், கும்பல் தாக்குலில் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here