Tuesday, 4 December 2018

'வாட்ஸ் ஆப்' வதந்தியை தடுக்க விளம்பர படங்களில் விழிப்புணர்வு

சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில், 'டிவி'க்களில், விளம்பர படங்களை ஒளிபரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்திகளால், 25க்கும் மேற்பட்டோர், கும்பல் தாக்குலில் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, 'வாட்ஸ் ஆப்'பில் பரவும் வதந்திகளை தடுக்க, போதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, அந்த நிறுவனத்திற்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இதைத் தொடர்ந்து, 'வாட்ஸ் ஆப்'பில் பரவும் வதந்திகளை கண்காணிக்க, அந்த நிறுவனம் சார்பில், கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், 'டிவி' வாயிலாக விளம்பர படங்கள் மூலம், 'வாட்ஸ் ஆப்'பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச அளவில், நம் நாட்டில் முதன்முறையாக எடுக்கப்பட்டு உள்ளது. 60 வினாடிகள் ஓடும் மூன்று விளம்பர படங்களை, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தயாரித்துள்ளது.



No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here