புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதியில் 11 அரசு, 4 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 12ம் வகுப்பில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவம் படிக்க மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். கடந்தாண்டு நீட் தேர்வு எழுத சென்ற கிராமப்புற மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதன் விளைவாக தற்போது நீட் தேர்வு பற்றிய ஆர்வம் மாணவர்களிடம் மட்டுமல்ல பெற்றோர்களிடமும் குறைந்து விட்டது.
இதனால் மாணவர்கள் எப்படியும் 12ம் வகுப்பு முடித்த பின்னர் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரியில் சேர போகிறோம் இந்த படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஏன் உடலை வருத்தி படிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துள்ளதாகவும், மேலும் நீட் தேர்வு எதிர்கொள்ள நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையை போக்க அரசு பாடத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்தாலும் அது ஆசிரியர், மாணவர்களிடம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதனை களையாமல் மாணவர்களிடம் 11, 12ம் வகுப்பில் திடீரென அதிகளவு பாடத்தை புகுத்துவதால் மாணவர்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வம் குறையுமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை. அதே சமயம் ஆசிரியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் மாணவர்களை ஆசிரியர்கள் கையாளுவதற்கு அஞ்சுகின்றனர்.
திருமயம், அரிமளம் பகுதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் அரசு நடத்தும் இலவச நீட் தேர்வு பயிற்சியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், ஆசிரியர்கள் மேல் அதிகாரிகளின் கட்டளைக்கு பயந்து மாணவர்களை வற்புறுத்தி நீட் பயிற்சியில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட், ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சியளிக்க 13 ஒன்றியங்களில் தேர்வு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சேர அந்தந்த பகுதியில் அரசு பள்ளியில் இருந்து குறைந்தது ஜேஇஇ தேர்வு பயிற்சிக்கு 2 மாணவர்கள், நீட் தேர்வு பயிற்சிக்கு 3 மாணவர்கள் என சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மாணவர்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. பயிற்சியில் சேர பள்ளியில் ஒரு சிறிய அளவில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் எடுக்கவில்லை. வேறு வழியின்றி 5 மாணவர்கள் பயிற்சிக்கு செல்ல தேர்வு செய்து அனுப்பிய போது அவர்கள் நீட் பயிற்சிக்கு போக மறுப்பு தெரிவித்தனர்.
மாணவர்களிடம் காரணம் கேட்டபோது தேர்வு மையம் வெளியூர், வெளிமாநிலங்களில் இருப்பதால் பெற்றோர்கள் எங்களை அனுப்ப மாட்டார்கள் என்று தெரிவித்தனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு 11ம் வகுப்பிலிருந்து பல ஆயிரம் கட்டணத்துடன் பள்ளி நிர்வாகம் நீட் பயிற்சி நடத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களை படிக்க வைக்க அந்தளவுக்கு பெற்றோர்களிடம் பணம் இல்லை. மேலும் அரசு பள்ளி பாடத்திட்டம், கல்வி முறை மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இல்லை என்றார்.
-தினகரன்
இதனால் மாணவர்கள் எப்படியும் 12ம் வகுப்பு முடித்த பின்னர் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரியில் சேர போகிறோம் இந்த படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஏன் உடலை வருத்தி படிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துள்ளதாகவும், மேலும் நீட் தேர்வு எதிர்கொள்ள நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையை போக்க அரசு பாடத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்தாலும் அது ஆசிரியர், மாணவர்களிடம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதனை களையாமல் மாணவர்களிடம் 11, 12ம் வகுப்பில் திடீரென அதிகளவு பாடத்தை புகுத்துவதால் மாணவர்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வம் குறையுமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை. அதே சமயம் ஆசிரியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் மாணவர்களை ஆசிரியர்கள் கையாளுவதற்கு அஞ்சுகின்றனர்.
திருமயம், அரிமளம் பகுதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் அரசு நடத்தும் இலவச நீட் தேர்வு பயிற்சியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், ஆசிரியர்கள் மேல் அதிகாரிகளின் கட்டளைக்கு பயந்து மாணவர்களை வற்புறுத்தி நீட் பயிற்சியில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட், ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சியளிக்க 13 ஒன்றியங்களில் தேர்வு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சேர அந்தந்த பகுதியில் அரசு பள்ளியில் இருந்து குறைந்தது ஜேஇஇ தேர்வு பயிற்சிக்கு 2 மாணவர்கள், நீட் தேர்வு பயிற்சிக்கு 3 மாணவர்கள் என சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மாணவர்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. பயிற்சியில் சேர பள்ளியில் ஒரு சிறிய அளவில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் எடுக்கவில்லை. வேறு வழியின்றி 5 மாணவர்கள் பயிற்சிக்கு செல்ல தேர்வு செய்து அனுப்பிய போது அவர்கள் நீட் பயிற்சிக்கு போக மறுப்பு தெரிவித்தனர்.
மாணவர்களிடம் காரணம் கேட்டபோது தேர்வு மையம் வெளியூர், வெளிமாநிலங்களில் இருப்பதால் பெற்றோர்கள் எங்களை அனுப்ப மாட்டார்கள் என்று தெரிவித்தனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு 11ம் வகுப்பிலிருந்து பல ஆயிரம் கட்டணத்துடன் பள்ளி நிர்வாகம் நீட் பயிற்சி நடத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களை படிக்க வைக்க அந்தளவுக்கு பெற்றோர்களிடம் பணம் இல்லை. மேலும் அரசு பள்ளி பாடத்திட்டம், கல்வி முறை மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இல்லை என்றார்.
-தினகரன்
No comments:
Post a Comment