Saturday, 12 January 2019

10ம் வகுப்பு தனித்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் வரும், 7 முதல், 14ம் தேதி வரை, கல்வி மாவட்ட வாரியாக அமைகப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.ஆனால், 14ம் தேதி, போகி பண்டிகையை முன்னிட்டு, மாநில அரசால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க, 18 மற்றும், 19 ஆகிய தேதிகள் நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.விரிவான தகவல்களை, www.dge.tn.gov.in  என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here