அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும், அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கான அடிப்படை கற்றல் திறன்களை, மேம்படுத்தவும் அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நடுநிலைப்பள்ளிகளுடன் இணைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் குறித்து பட்டியல் அனுப்ப, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இ
ப்பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், வட்டார கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பை பள்ளியின் முன் வைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேர்க்கை நடத்த வேண்டும்.அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை வயது அடிப்படையில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளாக பிரிக்க வேண்டும். ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு, மாண்டிச்சோரி கல்வி முறை பயிற்சி அளிக்க வேண்டும். அப்பள்ளிகளில், கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகளை கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.அங்கன்வாடியில், வசதியில்லாத நிலையில், பள்ளி வகுப்பறைகள் கூடுதலாக இருந்தால், அதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 30 பள்ளிகளில், அங்கன்வாடி மையங்கள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளதாக கல்வித்துறைக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நேற்று, பட்டியல் அனுப்பப்பட்ட பள்ளிகளில், அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
ப்பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், வட்டார கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பை பள்ளியின் முன் வைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேர்க்கை நடத்த வேண்டும்.அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை வயது அடிப்படையில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளாக பிரிக்க வேண்டும். ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு, மாண்டிச்சோரி கல்வி முறை பயிற்சி அளிக்க வேண்டும். அப்பள்ளிகளில், கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகளை கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.அங்கன்வாடியில், வசதியில்லாத நிலையில், பள்ளி வகுப்பறைகள் கூடுதலாக இருந்தால், அதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 30 பள்ளிகளில், அங்கன்வாடி மையங்கள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளதாக கல்வித்துறைக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நேற்று, பட்டியல் அனுப்பப்பட்ட பள்ளிகளில், அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
No comments:
Post a Comment