Saturday, 12 January 2019

தன் குழந்தையை அரசு அங்கான்வாடியில் சேர்த்து முன் மாதிரியாக திகழும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

தன் சுய கெளரவத்திற்காக தாலி  கொடியை அடகு வைத்து தனியார் பள்ளியில் சேர்க்கும் இன்றைய பெற்றோர்கள் மத்தியில் தன் குழந்தையை அரசு அங்கான்வாடியில் சேர்த்த நெல்லை மாவட்ட ஆட்சியர் தி௫மதி.ஷில்பா சதீஷ் பிரபாகர் அவர்கள்.
பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளை எதை நோக்கி கொண்டு செல்கிறீர்கள்,  அவர்களுக்கு இந்த சமூகத்தின் வாழ கற்றுக் கொடுங்கள்,மனித நேயத்தை உணர்த்துங்கள்,  குழந்தை பிறக்கும் முன்பாகவே எந்த தனியார்  பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தயாராகி விடுகிறார்கள். நெல்லை மாவட்டம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறது என்று ஓர் கணக்கெடுப்பு நடத்தினால், அரசு பள்ளியின் சேர்க்கை 10% கூட தாண்டாது.

 நடுத்தர மற்றும் மிக ஏழ்மையான குடும்பத்தில் கூட தாலி செயினையும்,நகைகளையும் அடகு வைத்து தனியார் பள்ளியில்
சேர்க்கின்றார்கள். முதன் முதலாக தன் கால் தடத்தை பதிக்க  அடியெடுத்து வைக்கும் அந்த மழலையிடம் நீங்கள் என்ன திறமையை ஏதிர் பார்க்கிறீர்கள். அப்படியான ப௫வத்தில் அவர்கள் பூக்களுக்கு சமமானவர்கள்.நீங்கள் ஏமாற்றுவது தங்கள் குழந்தைகளையா,அல்லது உங்களையா,கல்வியையா? கல்வியானது மாணவனின் முழு ஆளுமையை வளரச் செய்ய வேண்டும்.
அரசு பள்ளியில் பணியாற்றும் 95% ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் தான் படிக்க வைக்கிறார்கள்,இவர்களுக்கே அரசு பள்ளி மீதும் அரசு ஆசிரியர்கள் மீதும் நம்பிக்கை இல்லாத போது அரசு பள்ளிக்கு கல்வி பயிலவ௫ம் மாணவர்களுக்கு இவர்கள் கற்பித்து கொடுக்கும் முறை கேள்வி குறியாக இ௫க்கும் சூழல் உ௫வாகியுள்ளது. இன்று நெல்லை  மாவட்ட ஆட்சியரின் குழந்தை அரசு  அங்கான்வாடியில் பயிலுகிறது என்றால் உண்மையாகவே  ஓர் முன்மாதிரியான செயல்.

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்,இல்லையென்றால் தனியார் பள்ளிகளுக்கு செலுத்தப்படும் தொகை தங்கள் ஊதியத்திலி௫ந்து கழிக்கப்படும் என்று நீதிமன்றமும்,தமிழக அரசும் சட்டத்தை இயற்றினால் மட்டுமே தற்போது வியாபாரமாக காணப்படும் தனியார் பள்ளியின் கல்வி முறை மாறி, படிக்கும் மாணவர்களுக்கு  தேவையான கல்வி அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்படும். பெற்றோர்களே மனசாட்டியுடன் சொல்லுங்கள் நாங்கள் முழு மனதோடு தான் தனியார் பள்ளியில் எங்கள் குழந்தைகளை  சேர்க்கின்றோம் என்று,இன்று நாம் நமக்கான வாழ்வியலை  தொலைத்துவிட்டு,  பக்கத்து வீட்டுக்காரா்களுக்கும், தன்னுடைய கவுரவத்திற்க்காகவும் வாழ ஆரம்பித்துவிட்டு அதை நம் குழந்தைகள் மீது தினிக்கின்றோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இதே போன்று முன் உதாரணமாக திகழும் நெல்லை மாவட்ட ஆட்சியரை தமிழக அரசு தங்கள் கவனத்தில் எடுத்து கொண்டு  ஊரிய பராட்டும், ஊக்கமும் அளித்தாள் மட்டுமே இனி வரக்கூடிய காலகட்டத்தில், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்க்கப்படுவதுடன், மாணவர்களின்
வாழ்க்கை தரமும், கல்வியும்,ஏதிர்காலமும் மாறும் என்பதை பதிவு செய்வதோடு *பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் இல்லாததால் மூடப்படும் சூழ்நிலையும் தற்போது  தமிழகத்தில் நாம் பார்க்கின்றோம்*..

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு இந்த சமூகத்தில் வாழவும்,மனித நேயத்தை உணர்த்தவும் கற்றுக் கொடுங்கள்.நெல்லை ஆட்சியரை முன்மாதிரியாக எடுத்து கொண்டு தங்களின் பிள்ளைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து அரசு பள்ளியின் தரத்தை உணர்த்துவோம் ஒன்றிணைந்து.

பதிவு:  க.மகேஷ் (சமூக ஆர்வலர் )
அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை, தி௫நெல்வேலி மாவட்டம்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here