ஊர்களின் பெயரை, தமிழ் உச்சரிப்பில் இருப்பதுபோல், ஆங்கிலத்திலும் மாற்றலாம்' என்று அரசுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை பரிந்துரைத்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், 110 ஊர்களின் பெயரை மாற்ற, தமிழ் வளர்ச்சித்துறை பரிந்துரை செய்துள்ளது.சில ஊர் மற்றும் வீதிகளின் பெயர்கள், தமிழில் ஒன்றாகவும், ஆங்கிலத்தில் வேறாகவும் இருக்கும். தமிழ் பெயர்களை சரியாக உச்சரிக்கத் தெரியாத, ஆங்கிலேயர் ஏற்படுத்திய குழப்பமே, இதற்கு காரணம்.
இந்த வித்தியாசம் காரணமாக, அங்கு வசிப்பவர்களுக்கு பல்வேறு வகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, முகவரி குளறுபடியால், அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழ் உச்சரிப்பில் இருப்பது போலவே, ஆங்கிலத்திலும் ஊர் பெயர்களை மாற்ற, அரசு உத்தரவிட்டது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், மாற்றப்பட வேண்டிய ஊர் மற்றும் வீதி பெயர்களின் பட்டியலை, அனுப்பி வைக்கும்படி தமிழ் வளர்ச்சித்துறை கோரியுள்ளது. கோவை மாவட்டத்தில், 110 ஊர்களின் பெயர்களை, தமிழ் வளர்ச்சித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்பு செழியன் கூறியதாவது:அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தமிழில் இருப்பது போல், ஆங்கிலத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊர்களின் விவரத்தை, அனுப்பும்படி அரசு கோரியுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்தும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது முடிவெடுக்க, அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது.
அதில் பரிசீலனை செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்படும் ஊர்களின் பெயர், விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அன்பு செழியன் தெரிவித்தார்.சாலை பெயர்களும் மாறுமா?'ஆங்கிலத்தில் இருக்கும் சாலைகளின் பெயர்களும், தமிழ் உசசரிப்புக்கு தகுந்தபடி மாற்றப்படும்' என்று அரசு அறிவித்தது. ஆனால், சாலைகளின் பெயரை மாற்றுவதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக, அலுவலர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதனால், முதல் கட்டமாக, ஊர் பெயர்களில் இருக்கும் குளறுபடிகளை மாற்றவும், மிகவும் அவசியம் இருந்தால் மட்டும், சாலைகளின் பெயர்களை மாற்றவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
-தினமலர்
இந்த வித்தியாசம் காரணமாக, அங்கு வசிப்பவர்களுக்கு பல்வேறு வகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, முகவரி குளறுபடியால், அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழ் உச்சரிப்பில் இருப்பது போலவே, ஆங்கிலத்திலும் ஊர் பெயர்களை மாற்ற, அரசு உத்தரவிட்டது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், மாற்றப்பட வேண்டிய ஊர் மற்றும் வீதி பெயர்களின் பட்டியலை, அனுப்பி வைக்கும்படி தமிழ் வளர்ச்சித்துறை கோரியுள்ளது. கோவை மாவட்டத்தில், 110 ஊர்களின் பெயர்களை, தமிழ் வளர்ச்சித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்பு செழியன் கூறியதாவது:அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தமிழில் இருப்பது போல், ஆங்கிலத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊர்களின் விவரத்தை, அனுப்பும்படி அரசு கோரியுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்தும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது முடிவெடுக்க, அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது.
அதில் பரிசீலனை செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்படும் ஊர்களின் பெயர், விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அன்பு செழியன் தெரிவித்தார்.சாலை பெயர்களும் மாறுமா?'ஆங்கிலத்தில் இருக்கும் சாலைகளின் பெயர்களும், தமிழ் உசசரிப்புக்கு தகுந்தபடி மாற்றப்படும்' என்று அரசு அறிவித்தது. ஆனால், சாலைகளின் பெயரை மாற்றுவதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக, அலுவலர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதனால், முதல் கட்டமாக, ஊர் பெயர்களில் இருக்கும் குளறுபடிகளை மாற்றவும், மிகவும் அவசியம் இருந்தால் மட்டும், சாலைகளின் பெயர்களை மாற்றவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
-தினமலர்
No comments:
Post a Comment