வரும் லோக்சபா தேர்தலில், யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை உறுதிசெய்யும் இயந்திரத்தின், செயல்பாடுகள் குறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம், கோவையில் நேற்று துவங்கியது.லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும், மின்னணு ஓட்டு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இம்முறை, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், ஒப்புகைச்சீட்டு அளிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, அதிகாரிகளுக்கு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி நடந்தது. கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் சுந்தரராமன் முன்னிலை வகித்தார்.மாநில அளவிலான பயிற்சியாளர்களான, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ் பயிற்சி அளித்தனர்.ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பற்றி விளக்கம் அளித்த அலுவலர்கள், 'மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, நாளை முதல் மாவட்டம் முழுக்க வாகன பிரசாரம் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
அவர்கள் மேலும் கூறி யதாவது:n ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 6 வாகனங்கள் வீதம், களம் இறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும், மின்னணு ஓட்டு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் இருக்கும்; அவற்றின் செயல்பாடு பற்றி விளக்கம் அளிக்க, நான்கு அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும்.n பிரசார வாகனத்தில் பதிவேடு பராமரிக்க வேண்டும். உடனுக்குடன் படம் எடுத்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.பிரசாரத்தில் ஈடுபடவுள்ள ஒவ்வொரு வாகன குழுவினரும், நாளொன்றுக்கு குறைந்தது மூன்று இடங்களில், ஆயிரம் பேரிடமாவது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மின்னணு ஓட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே, ஒப்புகைச்சீட்டு இயந்திரம், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது; அதுபற்றி பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில், செயல்விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது.
7 வினாடி பார்க்கலாம்!
ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம், கடந்த சட்டசபை தேர்தலின்போது, கோவை வடக்கு தொகுதியில் மட்டும் பயன்படுத்தப்பட்டது. இந்த முறை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர் ஓட்டு அளித்தவுடன், 'எந்த சின்னத்தில் ஓட்டு பதிவானது' என்ற விபரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில், ஏழு வினாடிகள் தெரியும்.அதை, வாக்காளர் பார்த்துக்கொள்ளலாம். அதன் பின் அந்த விபரம் மறைந்து விடும். உடனடியாக, அந்த வாக்காளருக்கான ஒப்புகைச்சீட்டு, அந்த இயந்திரத்தின் பெட்டிக்குள் விழுந்து விடும். இந்த ஒப்புகைச்சீட்டு, வாக்காளரிடம் வழங்கப்பட மாட்டாது; தேர்தல் ஆணையத்திடமே இருக்கும்; தேர்தல் முடிவு தொடர்பாக சர்ச்சை எழுந்தால், சரிபார்க்க உதவிகரமாக இருக்கும்.
-தினமலர்
இது குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள, அதிகாரிகளுக்கு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி நடந்தது. கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் சுந்தரராமன் முன்னிலை வகித்தார்.மாநில அளவிலான பயிற்சியாளர்களான, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ் பயிற்சி அளித்தனர்.ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பற்றி விளக்கம் அளித்த அலுவலர்கள், 'மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, நாளை முதல் மாவட்டம் முழுக்க வாகன பிரசாரம் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
அவர்கள் மேலும் கூறி யதாவது:n ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 6 வாகனங்கள் வீதம், களம் இறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும், மின்னணு ஓட்டு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் இருக்கும்; அவற்றின் செயல்பாடு பற்றி விளக்கம் அளிக்க, நான்கு அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும்.n பிரசார வாகனத்தில் பதிவேடு பராமரிக்க வேண்டும். உடனுக்குடன் படம் எடுத்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.பிரசாரத்தில் ஈடுபடவுள்ள ஒவ்வொரு வாகன குழுவினரும், நாளொன்றுக்கு குறைந்தது மூன்று இடங்களில், ஆயிரம் பேரிடமாவது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மின்னணு ஓட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே, ஒப்புகைச்சீட்டு இயந்திரம், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது; அதுபற்றி பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில், செயல்விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது.
7 வினாடி பார்க்கலாம்!
ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம், கடந்த சட்டசபை தேர்தலின்போது, கோவை வடக்கு தொகுதியில் மட்டும் பயன்படுத்தப்பட்டது. இந்த முறை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர் ஓட்டு அளித்தவுடன், 'எந்த சின்னத்தில் ஓட்டு பதிவானது' என்ற விபரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில், ஏழு வினாடிகள் தெரியும்.அதை, வாக்காளர் பார்த்துக்கொள்ளலாம். அதன் பின் அந்த விபரம் மறைந்து விடும். உடனடியாக, அந்த வாக்காளருக்கான ஒப்புகைச்சீட்டு, அந்த இயந்திரத்தின் பெட்டிக்குள் விழுந்து விடும். இந்த ஒப்புகைச்சீட்டு, வாக்காளரிடம் வழங்கப்பட மாட்டாது; தேர்தல் ஆணையத்திடமே இருக்கும்; தேர்தல் முடிவு தொடர்பாக சர்ச்சை எழுந்தால், சரிபார்க்க உதவிகரமாக இருக்கும்.
-தினமலர்
No comments:
Post a Comment