Thursday, 28 February 2019

2019 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் மார்ச்.15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றினை எழுதுவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009 மற்றும் தேசிய ஆசிரியர் கவுன்சில் ஆகியவை தகுதிகளை வரையறுத்துள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதேபோல், அரசு விதிகளின்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் 1 தேர்வினை எழுதுவதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் 2  தேர்வினை எழுதுவதற்கான கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிகள் இதற்கும் பொருந்தும். இந்த தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் கேள்விக்குறி வகை வினாக்களாக அமைக்கப்பட்டு நடத்தப்படும். இந்த தேர்விற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ww.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பயன்படுத்தக்கூடிய மெயில் ஐடி, மொபைல் நம்பர் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் அனைத்து தகவல்களும் இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஆன்லைனில் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி 5 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500ம், எஸ்சி, எஸ்சி-ஏ, எஸ்டி, மாற்று திறனாளிகள் ஆகியோர் ரூ.250 கட்ட வேண்டும்.
தகுதியான தேர்வர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்களுக்கு எந்தவித எழுத்துப்பூர்வமான தகவல்களும் அளிக்கப்படாது. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் தேர்ச்சி பெற்றால் ஏழு ஆண்டுகள் செல்லும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அளிக்கக்கூடிய சான்றிதழானது பணி நியமனத்திற்கு தகுதி பெற்றது. ஆசிரியர் பணிக்கு தனியாக போட்டி தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தவறான தகவல் அளித்தாலும் தேர்வின்போது முறைகேடுகள் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here