மத்திய அரசின், 6 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் பயன்பெற, சிறு, குறு விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. மூன்று தவணையாக, தலா, 2 ஆயிரம் வீதம், விவசாயி வங்கி கணக்கில் வழங்கப்பட உள்ளது.
சிறு, குறு விவசாயிகள், 1.42 லட்சம் பேரின் விவரங்களை, புள்ளியியல் துறை, வேளாண்துறை வசம் வழங்கியுள்ளது. இருப்பினும், தகுதியான விவசாயிகளை கண்டறியும் வகையில், கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள், சிட்டா - அடங்கல், ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம், மொபைல் போன் எண் போன்ற விவரங்களை, படிவத்தில் பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும். எனவே, சிறு, குறு விவசாயிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை திட்ட விண்ணப்பத்தில், 23 வகையான விவரங்களை பூர்த்தி செய்து, படிவத்தை வழங்க வேண்டும். முழு விவரங்களை பூர்த்தி செய்து வழங்குவதுடன், 'என்னால் வழங்கப்பட்ட தவறான தகவல்கள் பின்வரும் நாட்களில் கண்டறியப்பட்டதால், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன்' என்று உறுதி அளித்து, கையொப்பமிட்டு, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் மார்ச் மாதம், முதல் தவணையாக, வங்கி கணக்கு மூலமாக, 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. எனவே, சிறு, குறு விவசாயிகள், முழு விவரத்துடன் சென்று, வி.ஏ.ஓ., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. மூன்று தவணையாக, தலா, 2 ஆயிரம் வீதம், விவசாயி வங்கி கணக்கில் வழங்கப்பட உள்ளது.
சிறு, குறு விவசாயிகள், 1.42 லட்சம் பேரின் விவரங்களை, புள்ளியியல் துறை, வேளாண்துறை வசம் வழங்கியுள்ளது. இருப்பினும், தகுதியான விவசாயிகளை கண்டறியும் வகையில், கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள், சிட்டா - அடங்கல், ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம், மொபைல் போன் எண் போன்ற விவரங்களை, படிவத்தில் பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும். எனவே, சிறு, குறு விவசாயிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை திட்ட விண்ணப்பத்தில், 23 வகையான விவரங்களை பூர்த்தி செய்து, படிவத்தை வழங்க வேண்டும். முழு விவரங்களை பூர்த்தி செய்து வழங்குவதுடன், 'என்னால் வழங்கப்பட்ட தவறான தகவல்கள் பின்வரும் நாட்களில் கண்டறியப்பட்டதால், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன்' என்று உறுதி அளித்து, கையொப்பமிட்டு, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் மார்ச் மாதம், முதல் தவணையாக, வங்கி கணக்கு மூலமாக, 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. எனவே, சிறு, குறு விவசாயிகள், முழு விவரத்துடன் சென்று, வி.ஏ.ஓ., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment