கோவையில் இரண்டாம் நாளாக நேற்றும், தகவல் ஆணையம் சார்பில் விசாரணை நடந்தது.தகவல் கோரி வரும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ, மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
அவ்வாறு மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்களின் மீது, கோவையில் நேற்று முன்தினம், தகவல் ஆணையர் முருகன் விசாரணை நடத்தினார்.இரண்டாம் நாளாக நேற்றும் விசாரணை நடந்தது.
கோவை கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அரங்கில், மாநில தகவல் ஆணையர் தக்ஷிணாமூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.இதில், போலீஸ் கமிஷனர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், சிறைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராகினர்.கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள அரங்கில், மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் விசாரணை மேற்கொண்டார். இதில், அரசு கலைக்கல்லுாரி, குடிநீர் வடிகால் வாரியம், வெவ்வேறு பேரூராட்சிகளில் இருந்து, பொதுத்தகவல் அலுவலர்கள் ஆஜராகினர்.
-தினமலர்
அவ்வாறு மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்களின் மீது, கோவையில் நேற்று முன்தினம், தகவல் ஆணையர் முருகன் விசாரணை நடத்தினார்.இரண்டாம் நாளாக நேற்றும் விசாரணை நடந்தது.
கோவை கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அரங்கில், மாநில தகவல் ஆணையர் தக்ஷிணாமூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.இதில், போலீஸ் கமிஷனர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், சிறைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராகினர்.கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள அரங்கில், மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் விசாரணை மேற்கொண்டார். இதில், அரசு கலைக்கல்லுாரி, குடிநீர் வடிகால் வாரியம், வெவ்வேறு பேரூராட்சிகளில் இருந்து, பொதுத்தகவல் அலுவலர்கள் ஆஜராகினர்.
-தினமலர்
No comments:
Post a Comment