கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாவட்ட அளவில் சிறந்த பள்ளி, சிறந்த முன்னுதாரணப் பள்ளி, பசுமைப் பள்ளி, 2014-15 ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ், கல்வி தரத்தில் "யு' கிரேடு, மாநில அளவில் 2014-15 சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைப் பள்ளிக்கான முதல் பரிசு, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான 2015-16 காமராசர் விருது, 2016-17 குழந்தை நேயப் பள்ளி போன்ற விருதுகளை தொடர்ந்து பெற்றுள்ளது.
2015-2016-ஆம் கல்வியாண்டில் இப்பள்ளி துவக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும் கடந்த 2007-ஆம் ஆண்டு பள்ளித் தலைமையாசிரியராக இப்பள்ளியில் பதவியேற்ற சி.வீரமணி, மாணவர் நலனுக்காகவும், அரசின் உதவியால் பள்ளியை மேம்படுத்தி மாணவர்களை கற்றல், ஒழுக்கம், போன்றவற்றில் முன்னுதாரணமாக்கியதால், இவருக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2015-2016-ஆம் கல்வியாண்டில் இப்பள்ளி துவக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும் கடந்த 2007-ஆம் ஆண்டு பள்ளித் தலைமையாசிரியராக இப்பள்ளியில் பதவியேற்ற சி.வீரமணி, மாணவர் நலனுக்காகவும், அரசின் உதவியால் பள்ளியை மேம்படுத்தி மாணவர்களை கற்றல், ஒழுக்கம், போன்றவற்றில் முன்னுதாரணமாக்கியதால், இவருக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment