Saturday, 28 September 2019

நீட் ஆள்மாறாட்டம் : மேலும் 3 மருத்துவ மாணவர்கள் கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று டாக்டர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் நேற்று சிக்கிய நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கிருஷ்ணகிரி, விழுப்புரம் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த அபிராமி, பிரவீன், ராகுல் ஆகிய 3 பேர் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதித் சூர்யாவின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here