Thursday, 9 April 2020

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: கூடுதல் கால அவகாசம் தர வலியுறுத்தல்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் எடுக்கப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, இயல்பான சூழல் திரும்பியதும் கூடுதல் கால அவகாசம் அளித்து நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஆறு முதல் 14 வயது வரை, பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்து, மத்திய அரசின் சார்பில் அனைவருக்கம் கல்வி இயக்ககம் மூலம் கணக்கெடுப்பு நடக்கிறது.

ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்கக ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், விருப்பமுள்ள தன்னார்வலர்கள், குழுவாக இணைந்து இக்கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதில் கண்டறியப்படும் குழந்தைகளை, அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகேயே உள்ள பள்ளிகளிலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மையங்களிலும் சேர்க்கப்படுகின்றனர்.கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வழக்கமான இந்த கணக்கெடுப்பு, ஏப்., மாதம் நடத்தப்படும்.தற்போது, 'கொ ரோனா' வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், இதுதொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. தாமதமாகும் தேர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்தும், பின்னர் அறிவிக்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது.இதனால், பள்ளிகள் திறந்த பின்னர், இயல்பான சூழல் மாறிய பின்னர், கூடுதல் அவகாசம் விட்டு, இந்த கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே, இடம் பெயர்ந்து வரும் குழந்தைகளின் பட்டியலை முழுமையாக கண்டறிய முடியும் என ஆசிரியர் பயிற்றுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here