Thursday, 9 April 2020

கல்லுாரி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

கல்லுாரி மாணவர் களுக்கு, பேராசிரியர்கள் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென, பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அவர்களின் மனநிலையை கண்காணித்தும், அவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கவும், பல் கலைக்கழக மானியக்குழு இணையதளம் மூலமாக அறிவுறுத்தியுள்ளது.

இதில் ஊரடங்கு நாட்களில், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், வீடுகளுக்கு செல்லாத மாணவர்கள் விடுதியில் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.மனநல ஆலோசகர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு, ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்கள் இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என, அவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.விடுதியில் மாணவர்கள் தங்கியிருக்கும் பட்சத்தில், அவர்களை பேராசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.தொடர்ந்து, இமெயில், தொலைபேசி அல்லது சமூக வலைதளங்கள் மூலம் பேராசிரியர்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மாணவர்கள், அவர்களுக்கான உளவியல் ரீதியான ஆலோசனை பெற, கட்டணமில்லாத தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம்.மேலும், கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களும் இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளை, பல் கலைக்கழக மானிய குழு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here