தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வேலைக்கு செல்லாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளனர் அரசுப்பள்ளிகளை காக்க வேண்டும் என்றும் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன், திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் மணிமேகலை சோலையார்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலர் கோமதி மற்றும் கமலநாதன் ஆகியோர் அறிவுரையின்படி 25- 4 -2020 சனிக்கிழமை முற்பகல் பதினோரு மணிக்கு சின்னகம்மியம்பட்டு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மளிகை பொருட்கள் மஞ்சள் ரவை கோதுமை மைதா சர்க்கரை சேமியா பிஸ்கட்ஸ் காய்கறி தொகுப்பு முதலியவற்றினை வழங்க தலைமை ஆசிரியர் சித்ரா முருகன் ஏற்பாடு செய்தார். சின்னகம்மியம்பட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆறு நபருக்கு நிவாரண பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் வட்டார கல்வி அலுவலர் கோமதி அலுவலக உதவியாளர் ஆனந்தகுமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், குமரேசன் முன்னாள் ராணுவ வீரர் புருஷோத்தமன் & தியாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற செயலர் அறிவுசெல்வி ஆகியோர் நிவாரண பொருட்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கினார்கள். அரசு அறிவித்தபடி சமூக விலகலை கடைபிடித்து வருகை புரிந்த அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொரானா வைரஸ் விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறப்பட்டது.
-News J
No comments:
Post a Comment