Tuesday, 19 May 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: புதிய அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முன்னதாக, ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை.


ஜூன் 15: மொழிப்பாடம்.

ஜூன் 17; ஆங்கிலம்.

ஜூன் 19: கணிதம்.

ஜூன் 20: விருப்ப மொழி.

ஜூன் 22: அறிவியல்.

ஜூன் 24: சமூக அறிவியல்.

ஜூன் 25: தொழில்கல்வி

தேர்வுகள் நடைபெறும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here