Sunday, 3 May 2020

கொரோனா நிதிக்கு ஒருமாத ஊதியத்தை கொடுத்த முதன்மைக்கல்வி அலுவலர்

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி  தனது ஒருமாத ஊதியத்தை கொரானா நிவாரண பணிக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கியுள்ளார்.போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.


சீர்திருத்த எண்ணம் வலுவாக கொண்ட இவர் கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலராக  இளையோர் செஞ்சிலுவை சங்க ஆலோசகர்களை கொண்டு மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் உழவர் சந்தைகளிலும் ,ஈ பாஸ் வழங்கும் இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி அருமையான பணியாற்றியுள்ளார்.

தேசிய பேரிடர் காலங்களில் பள்ளிக்கல்வித் துறை நாட்டு மக்களின் துயர் துடைக்க பக்கபலமாக நிற்கும் என்பதை  முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி  நிரூபித்துள்ளார் என ஆசிரியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here