ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் உதவி செய்தனர்.கோவை, சூலுார் ஒன்றியத்துக்குட்பட்ட பட்டணம்புதுார் தொடக்க பள்ளியில், 35 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக மாணவர்களின் பெற்றோர், வேலை கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளாதேவி மற்றும் ஆசிரியை கவிதா ஆகியோர், தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.கொரோனா தொற்றின் அபாயம் மற்றும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விளக்கினர்.
-தினமலர்
-தினமலர்
No comments:
Post a Comment