அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் வியாபார நோக்கமின்றி கல்வி கட்டணத்தை குறைக்க முன்வர வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீத சிறப்புச்சலுகை என்று தனியார் பள்ளி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தடுப்புப்பணியில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், சுகாதாரதுறை, வருவாய் துறை, காவல் துறையினர் சிறப்பாக செயலாற்றி மக்களை பாதுகாக்க இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.
அரசின் முயற்சிகள், பணிகள் குறித்த பல்வேறு செய்திகளை மக்களிடம் சேர்த்து மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் ஊடகத்துறையினரின் பணியும் அளப்பரியது. எனவே அரும்பணியாற்றிய , காவல்துறை, மருத்துவத்துறை, ஊடகத்துறை, அரசுத்துறை அலுவலர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களது குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் கல்விக்கட்டணத்தில் 50% வரை கட்டணச்ச லுகையும், கணினி பயிற்சிகளை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக நடத்த உள்ளதாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி அறிவித்துள்ளது.
தேசிய மாநில அளவில் விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் 50% கல்விக்கட்டண சலுகையையும் வழங்கவுள்ளதாக தனியார் கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது, கொரானாவிற்கு எதிராக பணியாற்றும் காவல்துறை மருந்துவதுறை, வருவாய் துறை, ஊடக துறையினரின் குழந்தைகளுக்கு 50% கட்டண சலுகை வழங்க முடிவு செய்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நண்பர்களும் அவர்களால் ஆன உதவிகளை செய்து வரும் இந்த வேளையில் நாங்கள் எடுத்துள்ள முயற்சி கொரானாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுகான குழந்தைகளுக்கு கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார்.இது போன்று அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் வியாபார நோக்கமின்றி கல்வி கட்டணத்தை குறைக்க முன்வர வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.
-news18
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தடுப்புப்பணியில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், சுகாதாரதுறை, வருவாய் துறை, காவல் துறையினர் சிறப்பாக செயலாற்றி மக்களை பாதுகாக்க இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.
அரசின் முயற்சிகள், பணிகள் குறித்த பல்வேறு செய்திகளை மக்களிடம் சேர்த்து மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் ஊடகத்துறையினரின் பணியும் அளப்பரியது. எனவே அரும்பணியாற்றிய , காவல்துறை, மருத்துவத்துறை, ஊடகத்துறை, அரசுத்துறை அலுவலர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களது குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் கல்விக்கட்டணத்தில் 50% வரை கட்டணச்ச லுகையும், கணினி பயிற்சிகளை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக நடத்த உள்ளதாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி அறிவித்துள்ளது.
தேசிய மாநில அளவில் விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் 50% கல்விக்கட்டண சலுகையையும் வழங்கவுள்ளதாக தனியார் கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது, கொரானாவிற்கு எதிராக பணியாற்றும் காவல்துறை மருந்துவதுறை, வருவாய் துறை, ஊடக துறையினரின் குழந்தைகளுக்கு 50% கட்டண சலுகை வழங்க முடிவு செய்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நண்பர்களும் அவர்களால் ஆன உதவிகளை செய்து வரும் இந்த வேளையில் நாங்கள் எடுத்துள்ள முயற்சி கொரானாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுகான குழந்தைகளுக்கு கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார்.இது போன்று அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் வியாபார நோக்கமின்றி கல்வி கட்டணத்தை குறைக்க முன்வர வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.
-news18
No comments:
Post a Comment