Friday, 5 June 2020

பத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், தனித் தேர்வுகளுக்கும் இன்று முதல் ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமும், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும் இவை வழங்கப்பட்டு வருகின்றன.

HOW TO DOWNLOAD 10TH PUBLIC EXAM HALL TICKET


ஆன்லைனில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: அசத்தும் கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை  ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்ப பள்ளிகள், காது கேளாதோருக்கான 1 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தனியார் அமைப்பின் அசத்தல் முயற்சி: ரூ.7 லட்சம் செலவு; ஸ்மார்ட் பள்ளியாக மாறிய அரசு தொடக்கப் பள்ளி

திருப்பூரில் சிகரம்தொடு என்ற தனியார் அமைப்பு அரசுப் பள்ளிக்கு ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்து ஸ்மார்ட் பள்ளியாக மாற்றியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் ஓன்று சேர்ந்து தொடங்கி இருப்பதுதான் இந்த  சிகரம் தொடு அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான்.

அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்குகொரோனா நிவாரணம் வழங்கிய ஆசிரியைகள்நெகிழ்ந்துபோன பெற்றோர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், தூப்பாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரோடு பரமேஸ்வரி என்ற உதவி ஆசிரியை பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

ஊரடங்கில் பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து வகுப்பு: பள்ளி முதல்வர் மீது வழக்கு

கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது, சமூகப்பரவல் கட்டத்தை எட்டி விட்டோமோ என்ற ஐயம் எழும் நேரத்தில் அரசு அனைத்து விதமான தளர்வுகளையும் மேற்கொண்டு முன்னெச்சரிக்கைகளைத் தவிர்த்து வருவது ஒருபுறம் என்றாலும் பள்ளிகளுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படவில்லை.

இந்நிலையில் பஞ்சாப் லூதியானாவில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தியதற்காக பிரின்ஸிபால் ஒருவர் மீது லூதியானா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சீனாவில் ஆரம்பப் பள்ளியில் தாக்குதல்: 37 மாணவர்கள் காயம்

சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 37 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் சீனாவின் குவின்சி சுஹாங் மாகாணத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் கத்தியால் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 குழந்தைகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் அப்பள்ளியில் காவலராகப் பணியாற்றியவர் என்றும் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஒத்துழைக்க மறுக்கும் மாணவர்கள்: ஆன்லைன் வகுப்புகளால் அவதியுறும் ஆசிரியர்கள்!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். வீட்டிற்குள்ளேயே இருக்கும் மாணவர்களுக்கு சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் ஜாலியாக வகுப்புகளில் கலந்து கொண்டாலும், ஆசிரியர்கள் அதிகம் சோர்வடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான மீம்கள் இணையத்தை கலக்கி வரும் நிலையில், ஆசியர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவதில்லை.

Wednesday, 3 June 2020

ஜூன் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி  முடிய இருந்தன.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.

Tuesday, 2 June 2020

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


12ம் வகுப்பு விடைத் தாள்களை திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன் லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை ஒரு வார காலத்துக்குள் வெளியிட தொழில் நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதில் பெரும்பாலும் சென்னை சேர்ந்தவர்களாக இருப்பதால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்த நிலையில் சென்னையில் தற்போது அலுவலகங்கள் ஓரளவுக்கு இயங்கத் தொடங்கிய நிலையில் அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நேற்று தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் தலைமைச் செயலக ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்

கேரளாவில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தேவிகா (14) இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணனின் மகள் தேவிகா. பட்டியலினச் சிறுமியான இவர் 10ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளா முழுவதும் இணையவழியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவிகாவின் வீட்டில் தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஃபோன் வசதி இல்லாததால் அவர் வகுப்பில் கலந்துகொள்ள இயலாமல் சிரமப்பட்டுள்ளார்.

பொதுத்தேர்வு: வெளி மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி; தமிழக அரசு அறிவிப்பு

சிறப்புப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் கலந்துக்கொள்ளுவதற்காக போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இன்று (ஜூன் 2) வெளியிட்ட அறிக்கை

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here