Monday, 14 June 2021

விறுவிறுப்பாக நடந்த பிளஸ் 1 மாணவர் சேர்க்கை- மருத்துவ, வணிகவியல் பிரிவுக்கு கடும் போட்டி

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி இருப்பதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் முதல் குரூப்பை தேர்வு செய்கிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடந்தது. சென்னையில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள்.

விரும்பிய பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதாலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததாலும் விறுவிறுப்பாக சேர்க்கை நடைபெற்றது.

இதுகுறித்து பெரம்பூர் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் கூறியதாவது:-

எங்கள் பள்ளியில் பிளஸ்-1 சேருவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். ஒரு வாரத்துக்கு முன்பே சேர்க்கை தொடங்கி விட்டது. மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். பலர் விண்ணப்பங்களை வாங்கி செல்கிறார்கள். ஒரு சில மாணவர்கள் உடனே பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தனர்.

மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவை கொடுத்து விடுகிறோம். அரசு 20 சதவீதம் வரை மாணவர்களை கூடுதலாக சேர்க்க அனுமதி அளித்துள்ளது. அதனால் மாணவர்கள் ஆர்வமாக சேர்ந்து வருகிறார்கள்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி இருப்பதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் முதல் குரூப்பை தேர்வு செய்கிறார்கள். வணிகவியல், பொருளியல், கணக்கு பதிவியல், 3-ம் பிரிவில் சேருவதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பி.காம் படிப்பில் சேருவதற்காக இந்த பிரிவை அதிக அளவில் விரும்புகிறார்கள். வணிக கணிதம் (பிசுனஸ் மேக்ஸ்) பாடப்பிரிவு இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 47 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள் எந்த பிரிவில் சேர்ந்து படித்தால் நல்லது என்று ஆலோசனை வழங்குவதற்காக ஆசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை நாடுகிறார்கள்.

-மாலை மலர் 


No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here