Tuesday, 10 May 2022

“பள்ளிகளின் தரத்தை உயர்த்த ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

கும்பகோணத்தில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.


இதில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கன பணி ஆணைகளை அவர் வழங்கினார்.

Thursday, 5 May 2022

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட முடிவா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில், உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், என்னை பொறுத்தவரை என்னுடைய மாணவர்களும் மாணவிகளும் தான் ராஜா ராணி ஏனெனில் எதிர்காலத்தில் அவர்கள் தான் நாட்டை ஆளப்போகிற ராஜா ராணிகள் என்றும், அவர்களுக்கு சிப்பாய்களாக இருந்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார்.

Monday, 2 May 2022

பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக கூறினார். மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது, இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது என்றார்.




கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான சாதி மோதல்கள் இருந்து வந்தது. தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது, திருநெல்வேலியில் சாதி கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மன்னர் சரபோஜி அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.




சிறப்பு விருந்தினராக  பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஏப்ரல் 2019-ல் நடைபெற்ற பருவத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1193 இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

Dyslexia instruction For DGE

Dyslexia instruction For DGE - Click Here to Download

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிகப் பணியிடம் ஊதிய கொடுப்பாணை

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிகப் பணியிடம் ஊதிய கொடுப்பாணை - Click Here to Download

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here