Monday, 2 May 2022

மன்னர் சரபோஜி அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.




சிறப்பு விருந்தினராக  பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஏப்ரல் 2019-ல் நடைபெற்ற பருவத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1193 இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். மாணவர்கள் பட்டங்கள் பெற்றோம் வேலைக்கு சென்றோம் என்று இருக்காமல் அடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேற வேண்டும்.

எந்தவித சுயநலம் பாராமல் உங்கள் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் பேராசிரியர்களோடு தொடர்பில் இருங்கள். உங்கள் வளர்ச்சியில் அவர்களின் பங்கு அதிகம். நவீன விஞ்ஞான வளர்ச்சியில் நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. நீங்கள் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்வில் முன்னேறுங்கள். புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், அனைத்து துறை ஊழியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here