வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், 25வது ஆண்டு பாரம்பரிய உணவு திருவிழா நேற்று நடைபெற்றது. பள்ளி செயலாளர் சாந்தி அஜய்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் தீனதயாளன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பாரம்பரியமான மண் பாண்ட சமையல், தானிய வகைகளான உணவுகள் காய்கறி உணவுகள், மாவு சத்து உணவுகள் தயாரிக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட ஸ்டால்களில் வைக்கப்படடிருந்தன. மேலும் துரித உணவுகள் மூலம் ஏற்படும் வியாதிகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த உணவு திருவிழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாரம்பரியமான மண் பாண்ட சமையல், தானிய வகைகளான உணவுகள் காய்கறி உணவுகள், மாவு சத்து உணவுகள் தயாரிக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட ஸ்டால்களில் வைக்கப்படடிருந்தன. மேலும் துரித உணவுகள் மூலம் ஏற்படும் வியாதிகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த உணவு திருவிழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
-தினகரன்
No comments:
Post a Comment