மூன்றாம் பருவத்திற்குரிய இலவச பொருட்களை நேரடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் அருள் குழந்தை தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் பிரான்சிஸ் வரவேற்றார். மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தமிழரசி, பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சின்னுசாமி, ஜெயராஜ், டெய்சிராணி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மூன்றாம் பருவத்திற்குரிய இலவச பொருட்களை நேரடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாத சரண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 அம்ச கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 30க்குள் நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 4ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம், 25ம்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது. வேலை நிறுத்த போராட்ட நாட்களை ஈடுகட்ட விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதை ரத்து செய்து, சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாளாக நடைபெற்று ஈடுசெய்து மாணவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், மூன்றாம் பருவத்திற்குரிய இலவச பொருட்களை நேரடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாத சரண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 அம்ச கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 30க்குள் நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 4ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம், 25ம்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது. வேலை நிறுத்த போராட்ட நாட்களை ஈடுகட்ட விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதை ரத்து செய்து, சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாளாக நடைபெற்று ஈடுசெய்து மாணவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment