Sunday, 24 December 2017

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசுத் தேர்வுகள் கோவை மண்டல துணை இயக்குனர் திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதம் நடக்கிறது. இத்தேர்வு எழுத விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேராக சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 என ரூ.175 தேர்வர்கள் செலுத்த வேண்டும்.


கோவை கல்வி மாவட்டத்தில் அசோகபுரம் ஆண்கள் பள்ளி, ராஜவீதி சிசிஎம்ஏ பள்ளி, சூலூர் ஆண்கள் பள்ளி, மேட்டுப்பாைளயம் நகராட்சி பள்ளி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி நகரவை ஆண்கள் பள்ளி, பொள்ளாச்சி நகரவை பெண்கள் பள்ளி, வால்பாறை ஆண்கள் பள்ளிகளில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை காணலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here