பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும், ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதைதொடர்ந்து, மாவட்ட நீதிபதி வழியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஜேக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபரிடம் (பொறுப்பு), ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் நேற்று மாலை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மனுவில்,‘மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு ஒப்புக்கொண்டவற்றை நிறைவேற்ற வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற வித்தியாச தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை போல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றத்தின் முழுப்பயனை வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பலதுறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, ஜாக்டோ ஜிேயா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஆசிரியர் சங்கம் சார்பில் அருளானந்தம், பாபு, தமிழ்செல்வன், அரசு ஊழியர் சங்கம் சார்பில் குமார், இன்னாசிமுத்து, ரங்கராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
-தினகரன்
21 மாத ஊதிய மாற்ற வித்தியாச தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை போல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றத்தின் முழுப்பயனை வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பலதுறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, ஜாக்டோ ஜிேயா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஆசிரியர் சங்கம் சார்பில் அருளானந்தம், பாபு, தமிழ்செல்வன், அரசு ஊழியர் சங்கம் சார்பில் குமார், இன்னாசிமுத்து, ரங்கராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
-தினகரன்
No comments:
Post a Comment