கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்தும், அதற்கான விண்ணப்பங்களை பிழையின்றி பூர்த்தி செய்வது குறித்தும், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு கோவை தனியார் கல்லூரியில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதனை கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி துவக்கி வைத்தார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செந்தில்வேல், செயல்விளக்கம் காட்டினார். ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது. இது குறித்து மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வக்குமார் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த கல்வி உதவித் தொகைகள் முறையாக மாணவ, மாணவிகளை சென்றடைவதில்லை. எனவே இந்த முகாமில் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் முகாமின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு செல்வக்குமார் கூறினார்.
-தினகரன்
மத்திய, மாநில அரசுகள் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த கல்வி உதவித் தொகைகள் முறையாக மாணவ, மாணவிகளை சென்றடைவதில்லை. எனவே இந்த முகாமில் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் முகாமின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு செல்வக்குமார் கூறினார்.
-தினகரன்
No comments:
Post a Comment