தகுதிகாண் பருவம் முடிக்காத ஆசிரியர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி ஜமாபந்தி துவங்கும் என முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கணேஷ்மூர்த்தி கூறியதாவது: கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகாண் பருவம் முடித்தல், பணிவரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை வழங்கக்கோரும் நிகழ்வுகளில் ஜமாபந்தி மூலமாக ஆணைகள் வழங்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தகுதிகாண் பருவம் முடித்தல், பணிவரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கக்கோரும் கருத்துருக்களைகளை கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கருத்துருக்களை அனுப்பும்போது, அனைத்து கல்வி சான்றுகளின் உண்மை தன்மை கண்டிப்பாக அறியப்பட்டிருக்க வேண்டும். டிஆர்பியால் நியமனம் செய்திருந்தால், 23.8.10க்கு பின் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று,
அதன் உண்மைதன்மையை அறிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் 1.6.2006க்கு முன்னர் தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்திருந்தால், 1.6.2006 அன்று முறையான பணியமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட ஆணையின் நகல் இணைக்க வேண்டும். பணிக்காலம் சரிபார்ப்பு 30.11.2017 வரை செய்யப்பட்டிருக்க வேண்டும். பணிவரன்முறை கோரும் கருத்துகள் மட்டும் இரு நகல்களிலும், ஒரு நகல் சமர்ப்பித்தால் போதும். கருத்துரு ஆவணங்களில் புகைப்பட நகல்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-தினகரன்
அதன்படி தகுதிகாண் பருவம் முடித்தல், பணிவரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கக்கோரும் கருத்துருக்களைகளை கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கருத்துருக்களை அனுப்பும்போது, அனைத்து கல்வி சான்றுகளின் உண்மை தன்மை கண்டிப்பாக அறியப்பட்டிருக்க வேண்டும். டிஆர்பியால் நியமனம் செய்திருந்தால், 23.8.10க்கு பின் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று,
அதன் உண்மைதன்மையை அறிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் 1.6.2006க்கு முன்னர் தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்திருந்தால், 1.6.2006 அன்று முறையான பணியமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட ஆணையின் நகல் இணைக்க வேண்டும். பணிக்காலம் சரிபார்ப்பு 30.11.2017 வரை செய்யப்பட்டிருக்க வேண்டும். பணிவரன்முறை கோரும் கருத்துகள் மட்டும் இரு நகல்களிலும், ஒரு நகல் சமர்ப்பித்தால் போதும். கருத்துரு ஆவணங்களில் புகைப்பட நகல்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-தினகரன்
No comments:
Post a Comment