Saturday, 16 December 2017

தாராபுரம் சார்நிலை கருவூல அதிகாரியை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் சார்நிலை கருவூல அதிகாரியை கண்டித்து கருவூல அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் ராஜூ தலைமை தாங்கினார்.



ஆர்ப்பாட்டத்தின் போது குண்டடம்,மூலனூர் பகுதிகளில் அரசு ஊழியர்களாக பணியாற்றுவோருக்கு தாராபுரம் நகரில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டுவாடகை படி வழங்க வேண்டும் என்ற அரசாணைக்கு புறம்பாக ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதோடு,அரசு ஊழியர்களை அநாகரிக முறையில் பேசிவரும் தாராபுரம் சார்நிலை கருவூல அதிகாரியைகண்டித்தும், அரசாணையை நடைமுறை படுத்த மறுக்கும் கருவூல அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
-தினகரன் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here