கோவை ஆனைகட்டி உண்டு உறைவிடப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடரும் என கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, பாலமலை, எண்4.வீரபாண்டி ஆகிய பகுதிகளில் பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் உண்டு உறைவிட ஆரம்ப பள்ளிகள் உள்ளன. மலைவாழ் மக்களின் குழந்தைகள் அதிகளவில் இந்த பள்ளிகளில் படிக்கின்றனர். இங்கு ஆங்கில வழிக்கல்வி அமலில் உள்ளதால், உறைவிட பள்ளிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனைகட்டி உண்டு உறைவிட பள்ளியில், நடப்பாண்டு முதல் ஆங்கிலவழிக் கல்வி துவங்கி, மாணவர் சேர்க்கை நடந்தது. இலவச புத்தகம் வழங்கப்பட்டு, முதல் பருவத்தில் ஆங்கில வழிக்கல்வியில் பாடம் நடத்தப்பட்டது. 2ம் பருவத்தில், தமிழ்வழி புத்தகம் வழங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வி திடீரென நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த பெற்றோர் இதுகுறித்து, ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவே, அவர்கள் பதிலளிக்காமல், இனி தமிழ் வழியில் தான் பாடம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 13ம் தேதி வெளியானது. இதையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலுமுத்து, அந்த பள்ளியில் விசாரணை நடத்துமாறு பெரியநாயக்கன்பாளையம் உதவிதொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், அந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி நிறுத்தப்பட்டது உறுதியானது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பள்ளியில் விசாரணை நடத்தப்பட்ட போது ஆங்கில வழிக்கல்வி நிறுத்தப்பட்டது உறுதியானது. அந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி தொடர வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி தொடர்ந்து நடத்தப்படும். இதற்கு தேவையான புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’, என்றார்.
-தினகரன்
ஆனைகட்டி உண்டு உறைவிட பள்ளியில், நடப்பாண்டு முதல் ஆங்கிலவழிக் கல்வி துவங்கி, மாணவர் சேர்க்கை நடந்தது. இலவச புத்தகம் வழங்கப்பட்டு, முதல் பருவத்தில் ஆங்கில வழிக்கல்வியில் பாடம் நடத்தப்பட்டது. 2ம் பருவத்தில், தமிழ்வழி புத்தகம் வழங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வி திடீரென நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த பெற்றோர் இதுகுறித்து, ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவே, அவர்கள் பதிலளிக்காமல், இனி தமிழ் வழியில் தான் பாடம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 13ம் தேதி வெளியானது. இதையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலுமுத்து, அந்த பள்ளியில் விசாரணை நடத்துமாறு பெரியநாயக்கன்பாளையம் உதவிதொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், அந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி நிறுத்தப்பட்டது உறுதியானது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பள்ளியில் விசாரணை நடத்தப்பட்ட போது ஆங்கில வழிக்கல்வி நிறுத்தப்பட்டது உறுதியானது. அந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி தொடர வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி தொடர்ந்து நடத்தப்படும். இதற்கு தேவையான புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’, என்றார்.
-தினகரன்
No comments:
Post a Comment