Sunday, 24 December 2017

நீண்ட தாமதத்திற்கு பிறகு கலந்தாய்வு முடிந்து ஆசிரியர்கள் மாநகராட்சி பள்ளிகளில் நியமனம்

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 83 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாநகராட்சி பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டும் கவுன்சிலிங் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்படுவர். அதன்படி, நடப்பு கல்வியாண்டு துவங்கிய கடந்த ஜூன் மாதம் பணியிடமாற்றம் தொடர்பாக மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து  கல்வித்துறையால் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் முதல்கட்டமாக மேல்நிலைப்பள்ளிக்கான ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளிக்கு 28 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர்.


இதில் 3 பேர் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். அதன்பின்னர், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை உள்ளடக்கிய உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு நீண்ட தாமதத்திற்கு பின்னர் கடந்த மாதம் நடந்தது. இதன் முடிவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் பல்வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். இதுகுறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் 58 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்தாய்வின் முடிவில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியில் நியமிக்கப்பட்டனர்,’ என்றனர்.

-தினகரன்

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here