Saturday, 16 December 2017

பாபநாசம் கருவூலத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவதி

பாபநாசம் கருவூலத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் கருவூலத்தில் 24 பேர் வேலையில் இருந்தனர். ஆனால் தற்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பாபநாசம் கருவூலத்தில் அசிஸ்டண்ட் டிரசரி அலுவலர், சப்-டிரசரி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. அசிஸ்டண்ட் டிரசரி அலுவலர் டெபுடேஷனில் 2 நாளைக்கு ஒருமுறை தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, திருவிடைமருதூர் போன்ற இடங்களிலிருந்து வருகின்றனர்.

இதனால் பணி தாமதமாவதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், பாபநாசம் கருவூலத்தில் 24 பேர் பணி செய்த இடத்தில் தற்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் அசிஸ்டெண்ட் 2 பேர், உதவியாளர் ஒருவர் அடக்கம். போதிய அலுவலர்கள் இல்லாததால் சம்பளம் மற்றும் இதர பில்கள் காலதாமதமாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத புதிய பள்ளி கட்டிடம்முத்திரைத் தாள் பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி போதுமான அலுவலர்களை பாபநாசம் கருவூலத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here