விருத்தாசலம்-கடலூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகம் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பவத்தன்று மாலை பள்ளி நேரம் முடிந்ததும் நுழைவு வாயிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது, தலைமையாசிரியர் அறையின் வெளிப்பகுதி மற்றும் வகுப்பறைகளின் வெளி பகுதியிலுள்ள மின் விளக்குகள் உடைக்கப்பட்டு கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பல இடங்களில் காலி மதுபாட்டில்கள், கப்புகள் மற்றும் சிகரெட் துண்டுகள் கிடந்தன.
இது குறித்து விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறும்போது, பள்ளியின் அருகில் லாரி நிறுத்துமிடம், சந்தை தோப்பு, மீன் மார்க்கெட், அரசு மதுபானக்கடை ஆகியவை உள்ளது. மேலும் பள்ளியை சுற்றிலும் பலமான சுற்றுச்சுவர் இல்லாததால் அவ்வப்போது பள்ளியினுள் வெளியாட்கள் வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர்.
சிலசமயங்களில், பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, பள்ளியின் அருகிலுள்ள தெருக்களில் இருந்து வகுப்பறைக்குள் மர்ம நபர்கள் கற்களை வீசுகின்றனர். கேட்டால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மிரட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பள்ளியை சுற்றிலும் வலுவான சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இரவு நேர காவலர்களை முறையாக பணிக்கு வர வலியுறுத்த வேண்டும், என்றனர்.
-தினகரன்
இது குறித்து விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறும்போது, பள்ளியின் அருகில் லாரி நிறுத்துமிடம், சந்தை தோப்பு, மீன் மார்க்கெட், அரசு மதுபானக்கடை ஆகியவை உள்ளது. மேலும் பள்ளியை சுற்றிலும் பலமான சுற்றுச்சுவர் இல்லாததால் அவ்வப்போது பள்ளியினுள் வெளியாட்கள் வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர்.
சிலசமயங்களில், பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, பள்ளியின் அருகிலுள்ள தெருக்களில் இருந்து வகுப்பறைக்குள் மர்ம நபர்கள் கற்களை வீசுகின்றனர். கேட்டால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மிரட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பள்ளியை சுற்றிலும் வலுவான சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இரவு நேர காவலர்களை முறையாக பணிக்கு வர வலியுறுத்த வேண்டும், என்றனர்.
-தினகரன்
No comments:
Post a Comment