Saturday, 29 September 2018

'மாணவர்களை மதிப்பெண்ணால் ஒப்பிடக்கூடாது' :பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா

கல்வியாளர் சங்கமம் சார்பில், 'கல்வி சமுதாயத்துக்கானது' என்ற தலைப்பில், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா பேசுகையில், ''கற்பிப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்களாகி விட மாட்டார்கள். யாரிடம் இருந்து மாணவன் கற்கிறானோ, அவரே ஆசிரியர். வெறும் மதிப்பெண்களை கொண்டு, மாணவர்களை தரம் பிரிப்பதோ, ஒப்பிடுவதோ சரியான அளவுகோல் அல்ல. வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம். இதற்கு, தினமும் பலதரப்பட்ட தகவல்களை அளிப்பவராக ஆசிரியர்கள் மாற வேண்டும்,'' என்றார்.ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார், பாரதிதாசன் பல்கலை பேராசிரியை முருகேஷ்வரி, கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Source:Dinamalar

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here